விழுப்புரத்தில் காரும் பஸ்ஸும் மோதியதில் நால்வர் பலி - வீடியோ
விழுப்புரம் இருவேல்பட்டு என்னுமிடத்தில் கார் மீது தனியார் பேருந்து மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
விழுப்புரம்: விழுப்புரம் சாலையில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்து மீது மோதிய விபத்தில் நான்கு பேர் பலியானார்கள். மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த சோனா என்பவர் தன் குடும்பத்தினருடன் ராமேஸ்வரத்துக்கு காரில் சென்று விட்டு, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது விழுப்புரம் அருகே இருவேல்பட்டு என்னும் இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவர் மீது மோதியது.
அப்போது சென்னையிலிருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கார் மீது மோதியது. அதில் சோனா, சாதனா, ரவி என்னும் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
பலத்த காயமடைந்த மூவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் முனிவார் என்பவர் உயிரிழந்தார்.
அதனையடுத்து, திருவெண்ணெய்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.