For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்தடுத்து வழக்குத் தொடருவதா.. நெடுமாறன் கண்டனம்

Google Oneindia Tamil News

Nedumaran slams cases against Mullivaikkal mutram
தஞ்சாவூர்: முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்பையொட்டி அடுத்தடுத்து வழக்குத் தொடருவது கண்டனத்துக்குரியது என்று உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நீதிமன்ற வழிகாட்டுதல்படி அமைதியாக எந்தப் பிரச்சனையும் இன்றி விழா நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அதனால் பொதுமக்கள் எராளம் வந்து முற்றத்தை பார்ப்பார்கள். அதனை சீர்குலைக்கும் விதமாக காவல் துறை நடந்து கொள்கிறது.

அமைதியாக நடக்கும் விழாவில் பங்கம் விளைவிக்க வேண்டாம். ஆதனால் வீண் பிரச்சனைகள் எற்பட வாய்ப்புகள் உள்ளது என்று கூறினார்.

முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பையொட்டி முதலில் வழக்கு தொடரப்பட்டது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்து அமைப்பாளர்கள் அனுமதி பெற்று திறந்தனர். இந்த நிலையில் பிரபாகரன் படம் போட்ட போஸ்டர்கள்ஒட்டியதாக கூறி நெடுமாறன் உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
President of World Tamils forum Nedumaran has slammed cases against Mullivaikkal mutram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X