For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நினைவு முற்றம் இடிப்பு: ஹைகோர்ட்டில் வழக்கு தொடரும் பழ.நெடுமாறன்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Nedumaran to sue against the demolition of Mullivaikkal memorial
சென்னை:தஞ்சையில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடித்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ''இலங்கையில் நடந்த போரின்போது, உயிரிழந்த தமிழர்களின் நினைவாக தஞ்சை, விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. இந்த நினைவு முற்றத்தை அமைப்பதற்காக சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. முறையாக அனுமதி பெற்றே நினைவு முற்றம் அமைக்கப்பட்டது.

ஆனால், எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல், தமிழக அரசு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டது குறித்து மற்ற கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்'' என்றார்.

English summary
Pazha Nedumaran has announced that his movement will go to the court against the demolition of Mullivaikkal memrial wall
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X