For Quick Alerts
For Daily Alerts
Just In
ஹைட்ரோகார்பனுக்கு எதிராக நெடுவாசலில் ஏப்.12 முதல் மீண்டும் தொடர் போராட்டம்!
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் ஏப்ரல் 12-ந் தேதி முதல் மீண்டும் தொடர் போராட்டம் நடைபெறும் என கிராம மக்கள் அறிவித்தனர்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் ஏப்ரல் 12-ந் தேதி முதல் மீண்டும் தொடர் போராட்டம் நடைபெறும் என கிராம மக்கள் அறிவித்தனர்.
மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பது நெடுவாசல் கிராம மக்களின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி இதுவரை 2 கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில் இன்று மீண்டும் நெடுவாசல் கிராமத்தில் அடையாள போராட்டம் நடைபெற்றது. இதில், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி ஏப்ரல் 12-ந் தேதி முதல் மீண்டும் தொடர் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Neduvasal Village People will hold third phase protest from Ap.12
Story first published: Sunday, February 18, 2018, 17:12 [IST]