For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிருஷ்ணசாமி உடல் உறவினரிடம் ஒப்படைப்பு.. கேரள ஆம்புலன்சில் தமிழகம் வருகிறது

கேரளாவில் மரணம் அடைந்த கிருஷ்ணசாமியின் உடல் தற்போது அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கிருஷ்ணசாமி உடல் உறவினரிடம் ஒப்படைப்பு- வீடியோ

    சென்னை: கேரளாவில் மரணம் அடைந்த கிருஷ்ணசாமியின் உடல் தற்போது அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. கேரளா அரசு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணசாமியின் உடல் திருவாரூர் கொண்டு வரப்பட உள்ளது.

    இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி மாராடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

    NEET Murder: Krishnasamis body given to his relatives by hospital department

    இவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம் தற்போது தேர்வு எழுதி முடித்துவிட்டு வெளியே வந்த பின் போலீசார் கிருஷ்ணசாமி உடல் இருக்கும் மருத்துமனைக்கு அழைத்து சென்றனர். கிருஷ்ணசாமியின் உடல் எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் அந்த மாணவன் கஸ்தூரிக்கு வயது 17 மட்டுமே ஆகிறது என்பதால் அவனிடம் கிருஷ்ணசாமியின் உடல் ஒப்படைக்கப்படவில்லை. கிருஷ்ணசாமி மருத்துவமனையில் மரணம் அடைந்தார் என்பதால் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் தற்போது கிருஷ்ணசாமியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவினர் கையெழுத்துக்குப் பின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக தமிழகத்தில் இருந்து அவரது உறவினர் அன்பரசன் வந்திருந்தார். இந்த நிலையில் கேரளா அரசு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணசாமியின் உடல் திருவாரூர் கொண்டு வரப்பட உள்ளது.

    English summary
    NEET Murder: Krishnasami's body given to his relatives by hospital department. His body will taken back by Kerala government hospital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X