3 மாதம் மனஉளைச்சலில் கஷ்டப்பட்ட மாணவி ஏஞ்சலின்.. தற்கொலை செய்த அவலம்!
தற்கொலை செய்துகொண்ட மாணவி ஏஞ்சலின் மருத்துவ சீட் கிடைக்காததால் மூன்று மாதம் மனஉளைச்சலில் கஷ்டப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: தற்கொலை செய்துகொண்ட மாணவி ஏஞ்சலின் மருத்துவ சீட் கிடைக்காததால் மூன்று மாதம் மனஉளைச்சலில் கஷ்டப்பட்டுள்ளார்.
சென்னையில் நீட் தேர்வு எழுதி சீட் கிடைக்காததால் மாணவி ஏஞ்சலின் சுருதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவர் சென்னையில் சோலையூரை சேர்ந்தவர்.
சேலையூரில் நீட் தேர்வு எழுதி சீட் கிடைக்காததால் மாணவி ஏஞ்சலின் ஸ்ருதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
பொறியியல் படிப்பில் சேர்ந்தார்
இந்த நிலையில் கட்டாயபடுத்திதான் ஏஞ்சலின் பொறியியல் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சின்ன வயதில் இருந்தே டாக்டர் கனவோடு படித்ததாக கூறப்படுகிறது. இவர் சிபிஎஸ்இ மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் நீட் தேர்வில் இவர் தேர்ச்சி அடைய முடியவில்லை.
மனஉளைச்சல்
இதனால் இவருக்கு மனஉளைச்சல் ஏற்பட்டு இருக்கிறது. வீட்டில் இருந்த யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். கல்லூரியிலும் மூன்று மாதத்தில் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். மேலும், தனது அறைக்குள்ளேயே தனியாக எப்போதும் கதவை பூட்டியபடி இருந்துள்ளார்.
மருத்துவமனையில் சேர்த்தனர்
இந்த நிலையில்தான் அவரை ஒருமுறை மருத்துவரிடமும் அழைத்து சென்றுள்ளனர். மனஉளைச்சல் மட்டுமே பிரச்சனை என்று கூறியுள்ளனர். ஆனால் தற்போது மருத்துவ படிப்பு கனவு கலைந்து போனதால் தற்கொலையே செய்துவிட்டார்.
பரிதாபம்
இதுபற்றி பேசிய ஏஞ்சலின் பெற்றோர், எங்கள் மகளே போய்விட்டாள் இனி என்ன செய்வது. யாரிடம் புகார் அளித்து என்ன செய்வது. 3 மாதம் அவள் அந்த அளவிற்கு கஷ்டப்பட்டாள், என்று கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.