சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பற்றி 'நீயா நானா' கோபிநாத் என்ன சொன்னார்?
சென்னை: நீயா நானா புகழ் கோபிநாத் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார்.
விஜய் டிவியில் வரும் நீயா நானா நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியை நடத்தும் கோபிநாத் குறித்து அறிமுகம் தேவையில்லை. அந்த அளவுக்கு அவரும் பிரபலமாக உள்ளார்.
அண்மையில் நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் அவர் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை எப்படி எல்லாம் வதைக்கிறார்கள் என ஜாலியாக பேசினார். பெற்றோர்கள் தங்களின் நிறைவேறாத ஆசைகளை எல்லாம் குழந்தைகள் மூலம் நிறைவேற்ற நினைக்கிறார்கள்.
தங்களால் டாக்டராகவோ, என்ஜினியராகவோ ஆக முடியவில்லை என்றால் குழந்தைகளை அவ்வாறு ஆக்கிப் பார்க்க விரும்புகிறார்கள். உங்களாலேயே முடியவில்லை என்றால் உங்களின் பிள்ளைகளால் மட்டும் எப்படி முடியும் என்று கேட்டார் கோபிநாத்.
உங்களின் குழந்தைகள் அனைத்து பாடங்களிலும் ஃபுல்மார்க் வாங்க வேண்டும், இது தவிர சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அசத்த வேண்டும் என்று விரும்பினால் என்ன செய்ய. அவர்கள் எல்லாம் பாவம் இல்லையா என்றார்.