கந்துவட்டியால் பறிபோன உயிர்கள். நடவடிக்கை எடுக்காத நெல்லை ஆட்சியரை கண்டித்து போராட்டம்
கந்துவட்டி கொடுமையால் 3 உயிர்கள் பறிபோயுள்ள நிலையில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை தமிழ் அமைப்பினர் இன்று முற்றுகையிட்டனர்.
Recommended Video
நெல்லை: கந்துவட்டி கொடுமையால் 3 உயிர்கள் பறிபோயுள்ள நிலையில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை தமிழ் அமைப்பினர் இன்று முற்றுகையிட்டனர்.
கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கி முத்து என்ற கூலி தொழிலாளி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் நேற்று தீக்குளித்தார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடி பொதுமக்கள் முன்னிலையில் அவர்கள் கதறி துடித்தது பார்ப்பவர்களை பதற வைத்தது.
இந்த விபத்தில் அவரது மனைவி சுப்புலட்சுமி, 2 வயது குழந்தை அட்சய ப்ரணீதா, மற்றும் 5 வயது குழந்தை மதி சரண்யா ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் இசக்கி முத்த சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையல் கந்துவட்டி கொடுமை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையை கண்டித்து நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை தமிழ் அமைப்பினர் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது ஆட்சியர், காவல்துறைக்கு எதிராகவும், கந்து வட்டியை தடுக்கக்கோரியும் முழக்கமிட்டனர்.
இதில் ஆண்கள் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
முன்னதாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக் கருதி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தமிழ் அமைப்பினர் போராட்டத்துக்குப் பின்பும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.