5ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் கொடுமை – தலைமையாசிரியர் கைது!
திருநெல்வேலி: திருநெல்வேலியில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த தலைமையாசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த சூரங்குடி பகுதியில் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியாரக இருப்பவர் கன்னியாகுமரி மாவட்டம் இரவிப்புதூரை சேர்ந்த சுப்பிரமணியன்.
இந்த பள்ளியில், 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். குறைவான மாணவர்களைக் கொண்ட இப்பள்ளியில் தலைமையாசிரியராக சுப்ரமணியன் இருந்து வந்தார்.
இந்நிலையில், 5 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தலை தொடர்ந்து செய்து வந்ததாக 1 ஆம் வகுப்பு மாணவன் மற்றும் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தலைமை ஆசிரியர் சுப்பிரமணியனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றுள்ளது. தலைமையாசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.