For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் கொடுமை – தலைமையாசிரியர் கைது!

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: திருநெல்வேலியில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த தலைமையாசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த சூரங்குடி பகுதியில் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியாரக இருப்பவர் கன்னியாகுமரி மாவட்டம் இரவிப்புதூரை சேர்ந்த சுப்பிரமணியன்.

இந்த பள்ளியில், 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். குறைவான மாணவர்களைக் கொண்ட இப்பள்ளியில் தலைமையாசிரியராக சுப்ரமணியன் இருந்து வந்தார்.

இந்நிலையில், 5 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தலை தொடர்ந்து செய்து வந்ததாக 1 ஆம் வகுப்பு மாணவன் மற்றும் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தலைமை ஆசிரியர் சுப்பிரமணியனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றுள்ளது. தலைமையாசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Tirunelveli school headmaster sexually harassed a 5th standard student in the school. Police arrested him and investigating about the incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X