பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை!! நெல்லையில் பதற்றம்!!!
நெல்லை : நரசிங்கநல்லூர் அருகே பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ஒருவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.
சுத்தமல்லி என்ற பகுதியில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கிட்டப்பா என்ற ரவுடியை போலீசார் தேடிவந்தனர்.
இந்நிலையில் அவர் தாமிர பரணி கரையோரம் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார் கிட்டப்பா மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க முயன்றனர்.
அப்போது, தப்ப முயன்ற ரவுடி கிட்டப்பா மற்றும் அவனது கூட்டாளிகள், எஸ்.ஐ.,யை அரிவாளால் தாக்கியும், பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தங்களை தற்காத்துக் கொள்ள ரவுடி கிட்டப்பாவை சுட்டுக்கொன்றதாக போலீசார் கூறியுள்ளனர். தகவல் அறிந்த நெல்லை சரக டி.ஐ.ஜி., முருகன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
நெல்லையில் பிரபல ரவுடியை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.