For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதலனைக் கட்டிப் போட்டு காதலியை பலாத்காரம் செய்த கும்பல்

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லையில் காதலனைக் கட்டிப்போட்டிவிட்டு, இளம்பெண்ணை ஒரு மர்ம கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி, திட்டுவிளைய சேர்ந்தவர் அந்த இளைஞர். அவர் ஒரு கணினி பொறியியல் வல்லுநர் என்பதால் நெல்லையின் பல்வேறு பகுதிகளில் சென்று கணினி வியாபரத்தில் ஈடுபட்டு வந்தார்.

அவரும், நாகர்கோவிலைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது காதலியுடன் நாங்குநேரி வந்த இவர்கள் மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து சென்ற மூன்று மர்ம நபர்கள் நாங்குநேரி, களக்காடு சாலையில் ஜீயர்குளம் அருகே சென்றபோது அவர்களை வழிமறித்தனர்.

காதலனைக் கட்டிப் போட்டுவிட்டு, அந்த இளம்பெண்ணை தனியிடத்துக்கு தூக்கிச் சென்ற 3 பேரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்களிடம் இருந்த லேப்டாப், செல்போன்கள் ஆகியவற்றையும் பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். நெல்லையில் இதுபோன்ற சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. விரைவில் காவல்துறை அம்மர்மநபர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Nellai woman was raped by 3 unknown persons before her lover. Police filed case and investigated about this incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X