"சசிகலாவுக்கு மக்கள் சக்தி ஆதரவு இருக்கிறது" நெட்டிசன்களிடம் 'வறுபடும்' தா.பாண்டியன்
சசிகலாவுக்கு மக்கள் சக்தி ஆதரவு இருப்பதாக கூறிய தா.பாண்டியனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
சென்னை: போயஸ் கார்டனில் சசிகலாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சந்தித்து ஆதரவு தெரிவித்ததை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் தலைமைப் பொறுப்பை சசிகலா ஏற்க கூடும் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சசிகலாவை பத்திரிகை அதிபர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்து சந்தித்து வருகின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியனும் சசிகலாவை சந்தித்து பேசினார். எப்போதும் தா. பாண்டியனின் தோளிலேயே இருக்கும் சிவப்புத் துண்டை சசிகலாவை சந்திக்கும் போது மட்டும் எடுத்து கையில் பிடித்துக் கொண்டு பவ்யமாக துயரம் தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார் தா. பாண்டியன்.
அத்துடன் செய்தியாளர்களிடம் பேசும்போது, சசிகலாவுக்கு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது எனவும் கூறினார். சசிகலாவை தா. பாண்டியன் சந்தித்த போது காட்டிய பவ்யமும், சசிகலாவுக்கு மக்கள் சக்தி இருக்கிறது என்ற பேட்டியும்தான் நெட்டிசன்களுக்கு 'அவலா'கிவிட்டது. சமூக வலைதளங்களில் இப்போது அதிகம் வறுபட்டு வருகிறார் தா.பாண்டியன்.
புரட்சி இருக்கும் இடத்தில்...
எங்கெல்லாம் "புரட்சி" இருக்கிறதோ அங்கெல்லாம் கம்யூனிஸ்ட் தோழர்கள் இருப்பார்கள்.
துக்கம் தொண்டையை அடைத்ததால்..
இந்த நெட்டிசனின் குசும்பு கமெண்ட்டை பாருங்கள்...
மானத்தை வாங்கியாச்சி...
ஒற்றை வரியில் நச்சென சொல்லும் கமெண்ட் இது
சீட்டுக்கு அடிபோடும் காம்ரேடுகள்
அதிமுகவுடன் கூட்டணிக்காக பேச்சுவார்த்தைக்கு இப்போதே அடிபோடுகிறார்களாம்.
எந்த மக்கள் சக்தி
அந்த மக்கள் சக்தி யார் என்பதை விளக்க வேண்டுமாம்
துண்டு போட்டு வைக்கிறீங்க
கூட்டணிக்காக அச்சாரம் போடுகிறாராம் தா.பாண்டியன்
பெரியார் சொன்னது...
அரசியலுக்குப் போனால் என்ன நடக்கும் என்பதை பெரியார் வரிகளில் சொல்லும் நெட்டிசன் இவர்
எதிர்கால தலைமுறைக்கு
கல்வெட்டில் எழுதி வைக்கச் சொல்லும் நெட்டிசன்..
தகுதியை இழந்துவிட்டீர்கள்..
கம்யூனிஸ்ட் என்ற தகுதியை இழந்துவிட்டாராம் தா.பா.