என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தீயில் கருகி உயிர்விட்ட இளம்பிஞ்சுகள்... #கந்துவட்டி
கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில்ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை: கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் கந்துவட்டி கொடுமை குறித்து பலமுறை புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த இசக்கி முத்து என்பவர் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்தார்.
இதில் இசக்கி முத்துவின் மனைவி சுப்புலெட்சுமி, அவரது 5 வயது மகள் மதி சரண்யா மற்றும் 2 வயது மகள் அட்சய ப்ரணீதா ஆகியோர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இசக்கி முத்துவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இசக்கி முத்து குழந்தைகளுடன் தீக்குளித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நெஞ்சை பதறவைக்கும் இந்த சம்பவத்துக்கு பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
|
கந்துவட்டி இருக்கு
போலீஸ் நடவடிக்கை எடுக்க வில்லை என்பதே முக்கிய பாயிண்ட்... அதை சரி செய்ய வலியுறுத்தாமல், பிற பேச்சு பயனில்லை. நெல்லை முழுதும் #கந்துவட்டி இருக்கு.. என்கிறது இந்த டிவிட்
|
பொங்கல் வச்சு போராடலாமே
2/ #ஜல்லிக்கட்டுக்கு பொங்கினதில் 25% #கந்துவட்டி கொடுமைக்கு #யூத் அட்லீஸ்ட் நெல்லை யூத் பொங்கல்ஸ் வச்சு போராடலாமே செய்வீர்களா செய்வீர்களா? என கேட்கிறார் இந்த வலைஞர்
|
கந்துவட்டி கொடுமை
ஒன்றரை லட்சம் தமிழின அழிவோடு இதையும் கடந்து செல்லவோ?! #கந்துவட்டி #கொடுமை.. என கேட்கிறார் இந்த வலைஞர்
|
தற்கொலை தவிர்க்கப்பட்டிருக்கும்
காவல்துறை #கந்துவட்டி புகாரை வச்சு பாதி எஃப்ஐஆர் பதிவு பண்ணியிருந்தால் குடும்பத்துக்கு முழுநம்பிக்கை வந்து தற்கொலை தவிர்க்கப்பட்டிருக்கும் இல்ல? என்கிறது இந்த டிவிட்
|
கருகிய இளம்பிஞ்சுகள்
என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தீயில் கருகி உயிர்விட்ட இளம்பிஞ்சுகள். #கந்துவட்டி #கொடுமை. இனிமேலாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என கேட்கிறார் இந்த வலைஞர்