ஜோனு... சில்லுனு... உங்க ஊர்ல மழையா! எங்க ஊர்லையும்! மழையை கொண்டாடும் நெட்டிசன்ஸ்!!
தமிழகம் முழுவதும் விட்டு விட்டு வெளுத்து வாங்கும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Recommended Video
சென்னை: தமிழகம் முழுவதும் விட்டுவிட்டு வெளுத்து வாங்கும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்யும் இந்த மழையை மக்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் இப்படி பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் எத்தனை சிரமம் இருந்தாலும் மழையை மக்கள் வரவேற்றுள்ளனர்.
|
சில்லுனு...
ஜோனு... சில்லுனு... உங்க ஊர்ல மழையா!🌧️☔
எங்க ஊர்லையும்!
|
மழை வந்தா லீவு விடுறது
கலெக்டருடைய முக்கியமான வேலைகளில் ஏதாவது ஒன்னு சொல்லு? மழை வந்தா லீவு விடுறது...
|
அரசுப்பேருந்துகள்
மழைக்காலங்களில் அரசு பேருந்துகளின் நிலை...
|
எவ்வளவு அழகானது..
மழையும் கப்பலும்
கொஞ்சம் அதிகம் #மழை பெய்தாலே போதும் #நண்பர்கள் எல்லாரும் பேப்பர் கப்பலை செய்து தெருவோர வாய்களில் விட்டு அது போகும் அழகை கண்டு பின்னாடியே ஓடியது😍
அனுபவித்தவர்களுக்கு தெரியும் அந்த மழை காலம் எவ்வளவு அழகானது என்று
|
முத்தமிட்டு செல்கிறது மழை
மேகத்திடம் சண்டையிட்டு சப்தமிட்டு முத்தமிட்டு
செல்கிறது மழை..!!