தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் இப்படி ஒரு துக்க செய்தியா?
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து கார் டிரைவர் ராஜா நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்து நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video
சென்னை: எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து கார் டிரைவர் ராஜா நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்து நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கினார். இதில் அவரது நண்பரும் கார் டிரைவருமான ராஜாவுக்கு முக்கிய பொறுப்பை வழங்கியிருந்தார்.
இதனால் தீபாவுக்கு கணவர் மாதவனுக்கும் இடையே பிரச்சினை எழுந்தது. மாதவனுக்கும் ராஜாவுக்கும் இடையிலான பிரச்சனை தொடர்ந்த நிலையில் இன்று மீண்டும் கட்சியிலிருந்து ராஜாவை நீக்கியுள்ளார் தீபா. இதனை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
|
அதிர்ச்சியான விஷயம்
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து டிரைவர் ராஜா அதிரடி நீக்கம்
இது என்ன பெரிய விஷயம்??!! இன்னும் கொஞ்ச நாள்ல, அந்த ராஜா தனியா கட்சி ஆரம்பிப்பான்..அதான் உண்மையிலயே அதிர்ச்சியான விஷயம் !!!
|
இப்படி ஒரு துக்க செய்தியா?
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து டிரைவர் ராஜா அதிரடி நீக்கம்
அடுத்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பாக்கப்பட்ட நேரத்தில் இப்படி ஒரு துக்க செய்தியா?
|
மரண வெய்ட்டிங்
தீபா ட்ரைவர் ஆரம்பிக்கப் போகும் கட்சி பெயர் என்னவாக இருக்கும்... மரண வெய்ட்டிங்கு
|
அமெரிக்க பங்குச்சந்தை சரிவு
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து டிரைவர் ராஜா அதிரடி நீக்கம்..
எதிரொலி : அமெரிக்க பங்கு சந்தை சரிவு
|
எம்புட்டு தைரியம்
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து டிரைவர் ராஜா அதிரடி நீக்கம்#
அக்காவுக்கு எம்புட்டு தைரியம் பாத்தியா.. இருந்த இரண்டு பேர்ல கட்சிய விட்டு நீக்கிட்டு அது மட்டும் கட்சிய நடத்துறத...