ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.. கருணாநிதியை வாழ்த்தும் நெட்டிசன்கள்
சென்னை: தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 95வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இப்போதிருந்தே, திமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
இனிப்புகள் கொடுத்தும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி மகிழ்வோர் ஒருபக்கம் என்றால், சமூக வலைத்தளங்களில் பாராட்டி, அவரது சேவைகளை நினைவு கூர்ந்து வருகிறார்கள் திமுகவினர்.
இப்படி நெட்டிசன்களால் கருணாநிதியை முன் வைத்து டிரெண்ட்டான சில டுவீட்டுகளை இங்கே பாருங்கள்
|
வேளாண் வளர்ச்சி
தமிழக விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் புதிய அடையாளத்தை ஏற்படுத்தி வேளாண் வளர்ச்சிக்கு வித்திட்ட மகத்தான தலைவர் கலைஞர்!! விவசாயிகள் போற்றும் தலைவர் கலைஞர்!
|
ஆதவன் மறையாது
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை...
|
ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு
திருவாரூர் தேரோடும் தெருக்களில் , இந்திப்பேயை துரத்தி தமிழ்ச் செருக்கோடு நடந்தவர் நீ !கலைஞர் வாழ்க! வாழ்க! வாழ்கவே!
|
சமூக நீதி பணி
தமிழ் உள்ள வரை தலைவர்,கலைஞர் புகழும் பேரும் ஓங்கும்!! நாளைய தலைமுறையினர் இவரின் சமூக நீதிக்கான தொண்டுப்பணியை கண்டு வியப்பர்!! எம் மக்களை வழிப்படுத்திய தலைவா நீர் வாழ்க!! வளர்க நின் புகழ்!😍
|
வேறு தலைவர் உருவாகவில்லை
கலைஞர் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அவரைப்போல ஒரு அரசியல்வாதி தமிழகத்தில் இன்னும் உருவாகவில்லைனு தான் சொல்லனும்!!
|
தமிழுக்காக தாங்குபவர்
கலைஞரின் எதிர்ப்பாளர்கள்,
அவரை எதிர்க்கட்டும்.
-
ஆனால்,
கலைஞர் போகிற போக்கில்,
தூற்றப் பட வேண்டிய தலைவர் அல்ல.
-
பொறாமை,வன்மம்,
காழ்ப்புணர்ச்சி, அவதூறுகள்,
இன்ன பிற எதிர்ப்பலைகளை,
இடி தாங்கி போல, எதிர்த்து நின்று,
-
தமிழுக்காகவும், தமிழனுக்காகவும், வாழும் தலைவன்.