மழையை பார்த்துக்கொண்டே டீ குடிக்க வேலையை நிறுத்திட்டு ஓடி வந்துட்டேன்.. நெட்டிசன்கள் ஜாலி ஷேரிங்
Recommended Video
சென்னை: கோடை காலத்தில் முதல் மழை சென்னையை தாலாட்டியுள்ளது. வெயிலின் உக்கிரத்தில் சிக்கி தவித்த சென்னைவாசிகளுக்கு இது நிம்மதியை கொடுத்துள்ளது.
மாலை நேரத்தில் பெய்த மழையால் காபி, டீ, ஸ்நாக்ஸ் சகிதம் இன்ப சூழலை கொண்டாட ஆரம்பித்துள்ளனர் சென்னை மக்கள்.
நெட்டிசன்கள் மட்டும் சும்மாவா. சுடச்சுட ஜில் மழையை போட்டோ, வீடியோக்களாக க்ளிக் செய்து பதிவேற்றம் செய்து மகிழ்ந்து வருகிறார்கள். அப்படியான நெட்டிசன்களின் மகிழ்ச்சி தருணங்கள் சிலவற்றை இங்கே பாருங்கள்.
|
வேலையை நிறுத்திவிட்டேன்
மழையை பார்த்ததும் வேலையை நிறுத்திவிட்டு, கையில் டீயுடன் மழையை வேடிக்கை பார்க்க வெளியே வந்துவிட்டேன் என்று மழை வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
|
பாட்டும், பஜ்ஜியும்
மழை பொழிவையடுத்து ஓஎம்ஆர் சாலையின் தோற்றம் இதுதான் என ஷேர் செய்துள்ள நெட்டிசன், மிளகாய் பஜ்ஜி, இளையராஜா இசை என இந்த மழையை கொண்டாட்டத்துடன் எதிர்கொள்வது பற்றி கூறுகிறார்.
|
இது சோளிங்கநல்லூர் நிலவரம்
சோளிங்கநல்லூர் எல்காட் சிட்டி பகுதியில் சூழ்ந்துள்ள கருமேகங்களும், மழை சூழலும் புகைப்படமாக ஷேர் செய்து மகிழப்பட்டுள்ளது இந்த நெட்டிசனால்.
|
இன்பமாய் இருக்குதய்யா
சென்னை மழை எதிரொலியால் ஏற்பட்ட எழில் மிகு தோற்றத்தை புகைப்படமாக பதிவு செய்துள்ளார் இந்த நெட்டிசன். மழை வாசம் உங்கள் மூக்கையும் துளைக்கிறதல்லவா?