ஏழை மாணவர்களின் கனவுகளை கேள்விக் குறியாக்கி சென்று விட்டார்...!! #சங்கர்
சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் மரணத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
சென்னை: சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் மரணத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை அண்ணாநகரில் செயல்பட்டுவரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்பத் தகராறில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தாரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை பயிற்சி அகாடமியில் மாணவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடல் பின்னர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் நாமக்கல் மாவட்டம் நல்லகவுண்டம்பாளையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
இரங்கல்
சங்கரின் மரணத்திற்கு ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள், திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் சமூக வலைதளங்களிலும் ஏராளமானோர் சங்கரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
|
கேள்விக்குறி
#ஏழை மாணவர்களின் கனவுகளை கேள்விக்குறியாக்கி சென்று விட்டார் #சங்கர்
|
900 வெற்றியாளர்கள்
சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை இவர் 900 வெற்றியாளர்களை உருவாக்கியவர்
|
வேதனை
சமூக நீதியை காப்பதில் மிகுந்த அக்கறையுடைய #சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனரின் மரணம் மிகுந்த வேதனையும், அதிர்ச்சியுமளிக்கிறது.
|
சங்கர் ஐஏஎஸ் அகாடமி
இதென்ன கொடுமை?
சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தனது வீட்டில் தற்கொலை.
|
நம்பமுடியாத நிகழ்வு
கொங்கு தமிழன் .. சங்கர் IAS அகாடமியின் தலைவர்... சங்கரின் மரணம்? நம்பமுடியாத நிகழ்வு.
|
தோற்றதினால்
நான் ஜெயித்திருந்தால், நான் மட்டும்தான் ஐ.ஏ.எஸ்., ஆகியிருப்பேன். தோற்றதினால் இன்று பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்-களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறேன்'' என்று எப்போதும் பெருமைபட சொல்வார் #சங்கர்
|
பேரிழப்பு!
சமூகநீதி உணர்வுடன் தொடர்ந்து பல்வேறு இளைஞர்களை அரசுப் பணி தேர்வுகளுக்கு தயார்படுத்தி வெற்றியாளர்களாக மாற்றிய சங்கர் அகாடமி ‘சங்கர்' அவர்களின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது!
அவருடைய மறைவு ஆட்சிப் பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பு!