இறைவனின் பூமி என்பதற்காக நீ இப்படி செய்திடலாகுமா..! கேரளா
கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை: கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
கனமழை மற்றும் வெள்ளத்தால் வரலாறு காணாத சேதத்தை சந்தித்துள்ளது கேரளா மாநிலம். பல்வேறு மாநிலங்களும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.
தமிழக அரசு ஏற்கனவே 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருந்த நிலையில் தற்போது கூடுதலாக 5 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது. இதனிடையே கேரள வெள்ளம் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
|
உணவு அனுப்புவது நல்லது
கேரளாவில் உணவு தட்டுப்பாடு வரும் முன் பக்கத்து உறவு மாநிலம் தமிழ்நாடு அருகில் இருக்கும் நகரங்களில் இருந்து உணவு அனுப்புவது நல்லது.
#கேரளாவெள்ளம்
|
கருணைக்காக காத்திருக்கிறது
கடவுளின் தேசம் #கேரளா கடவுளின் கருணைக்காக காத்திருக்கிறது !!
கேரளாவில் மொத்தமுள்ள 14மாவட்டங்களில் 13மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிப்புகள்
அனைவரும் தங்களால் இயன்ற தொகையை கீழ்க்கண்ட வங்கி கணக்கில் செலுத்தி உதவுங்கள்.
நிவாரணப் பொருட்களையும், அனுப்பி உதவுங்கள்.
|
கேரளா வெள்ளம்
மனிதன்
இயற்கை நியதிகளை மீறினாலும்...
இறைவன் வழக்கத்தை மீறினாலும்...
தண்டனை என்னவோ
மனிதனுக்கு தான்....
கேரளா வெள்ளம்....
|
இப்படி செய்திடலாகுமா?
கடவுளின் தேசம்
இன்று ஆனதே சேதம்
இயற்கையே சற்று ஓய்வெடு
இறைவனின் பூமி என்பதற்காக
நீ இப்படி செய்திடலாகுமா ..!
|
அதுவே நமக்கு கிடைக்கும்
நாம் இயற்கைக்கு என்ன செய்தோமோ அதுவே நமக்கு திரும்ப கிடைக்கும்.
இடம் : மலயத்தூர், #கேரளா