அண்ணன் தலையில முடி இருக்கும் போதே பயங்கரமா சிந்திபாப்ள இப்ப முடி வேற இல்ல.. நெட்டிசன்ஸ் லந்து
அதிமுகவில் இருந்தால் சாணம் கூட சாமி, விலகினால் சாமி கூட சாணம் என்ற ரைமிங்காக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சென்னை: அதிமுகவில் இருந்தால் சாணம் கூட சாமி, விலகினால் சாமி கூட சாணம் என்ற ரைமிங்காக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். அப்போது பேசிய செல்லூர் ராஜு அதிமுகவில் இருக்கும் வரை சாணம் கூட சாமியாக மாறும்; விலகினால் சாமி கூட சாணமாக மாறும் என்றார்.
அமைச்சரின் இந்த பேச்சு அதிமுக நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் நெட்டிசன்கள் அவரது இந்த பேச்சை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சில..
|
தள்ளி நின்னு இருக்கலாம்
அதிமுகவில் இருந்தால் சாணம் கூட சாமி.. விலகினால் சாமி கூட சாணம்.. #செல்லூர்_ராஜூ
அட என்ன தம்பி உங்க மேல சாணியை கரைச்சி ஊத்திட்டேனா?
என்ன தம்பி கொஞ்சம் தள்ளி நின்னு இருக்கலாம்!
|
இப்ப முடி வேற இல்ல
அதிமுகவில் இருந்தால் சாணம் கூட சாமி.. விலகினால் சாமி கூட சாணம்.. செல்லூர் ராஜூ
அண்ணன் தலையில முடி இருக்கும் போதே பயங்கரமா சிந்திபாப்ல இப்ப முடி வேற இல்ல முடி வளர்ந்தா சரியாயிடும்..
|
சாணின்னு சொல்லுங்க..
அதிமுகவில் இருக்கும் வரை சாணம் கூட சாமியாக மாறும்; விலகினால் சாமி கூட சாணமாக மாறும்.-விஞ்ஞானி செல்லூர் ராஜு
அடடே.. அப்போ அதிமுகல சாமின்னு... கொண்டாடுறவங்க
நிஜத்தில சாணின்னு சொல்லுங்க.. விலகியதால்
சாணின்னு நீங்க சொல்றவங்க..தான் நிஜமான சாமின்னு சொல்லுங்க..
|
நல்லது சொல்ல வராரு
அதிமுகவில் இருந்தால் சாணம் கூட சாமி.. விலகினால் சாமி கூட சாணம்.. #செல்லூர்_ராஜூ
அவர விடுங்கடா நாட்டுக்கு எதோ நல்லது சொல்ல வராரு...
|
அதிமுகவும் இல்ல
அதிமுகவில் இருந்தால்
சாணம் கூட சாமி.
விலகினால் சாமி கூட சாணம்.. செல்லூர் ராஜூ
ஆட்சி இல்லனா
அதிகாரமும் இல்ல
அதிமுகவும் இல்ல