இடைத்தேர்தல்களில் பணத்துக்கு பதிலாக பெட்ரோல் கொடுத்து ஓட்டு கேட்க போறாங்க! #petrol
பெட்ரோல் டீசல் விர் என உயர்ந்து வரும் நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கமென்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை பெட்ரோல் டீசல் விர் என உயர்ந்து வரும் நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கமென்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
ஆனாலும் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
உழைக்க வைத்தவர் மோடி
சோம்பேறிகளாக இருந்தவர்களை பெட்ரோல் ஊற்றுவதற்காக உழைக்கவைத்தவர் மோடி
|
கவலைவேண்டாம்
பெட்ரோல் டீசல் விலையை
பார்த்து பயந்து
கவலைப்படாதீர்கள்
இனி குறைந்த விலையில்
கிடைக்கும்
|
சைக்கில்ல..
ஹீரோ பைக்ல போன என்ன ஹீரோ சைக்கிளில் போக வைச்சிட்டிங்களேடா
இப்பப்பா பெட்ரோல் விக்கிற விலைக்கு சைக்கிள்ல தான் போகனும் பெட்ரோல் போட வசதி இல்லா சாமி.....
|
அதுக்குன்னு இப்படியா?
ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் டிவிட் போட்டேன் பெட்ரோல் விலை ரூபாய்.82ன்னு, ஆனால் இன்னைக்கு #பெட்ரோலின் விலை ரூபாய்.84.95
கொள்ளை அடிக்கலாம் அதுக்கு ன்னு இப்படி எல்லாம் கொள்ளை அடிச்சா நாடு தாங்காது
|
பெட்ரோல் கொடுத்து
வரும் இடைத்தேர்தல்களில் பணத்துக்கு பதிலாக பெட்ரோல் கொடுத்து ஓட்டு கேட்க போறாங்க.!