பந்த் அன்னைக்கும் வேலையா.. இதுக்கு தனியா பந்த் பண்ணனும்.. நெட்டிசன்கள் கலகல
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பந்த் நடைபெற்று வரும் நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பந்த் நடைபெற்று வரும் நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதோடு தனியார் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பந்த் குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
ஹர்பஜன் விளக்கம்
'பந்த்' என்பதே 'பந்து' என்ற தமிழ் சொல்லில் இருந்து மருவி உருவானதுதான் என ஹர்பஜன் சிங் சக வீரர்களுக்கு விளக்கமளித்தார்.
|
முழு அடைப்புனு சொல்லுங்க
தோனி: இன்னைக்கு 'பந்த்' நாம விளையாட போக வேண்டாம்.
ஹர்பஜன்: வாயில அடி.. வாயில அடி.. 'முழு அடைப்பு'னு சொல்லுங்க.
|
தனியா ஒருநாள் பண்ணனும்
பந்த் அன்னைக்கு வேலைக்கு போக சொல்றாங்க இதுக்கு தனியா ஒரு நாள் பந்த் பண்ணனும்
|
தமிழன்டா
தமிழகம் முழுவதும் இன்று பந்த்...
கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது;- செய்தி..
அண்ணே ஒயின் ஷாப் சரியா 12மணிக்கே திறந்துடுவீங்களா?
'"தமிழன் டா"'