"கன்னட ஈவெரா- முட்டாள் தமிழர்கள்" நெட்டிசன்களிடம் டன் கணக்கில் டின் வாங்கும் கொழுப்பு ஹெச். ராஜா!
தந்தை பெரியாரை விமர்சித்து ட்விட்டரில் பதிவு போட்டு நெட்டிசன்களிடம் வறுபட்டு கருகிக் கொண்டிருக்கிறார் ஹெச்.ராஜா.
சென்னை: ஜல்லிக்கட்டு புரட்சியாளர்கள், பச்சைத் துரோக பாரதிய ஜனதா அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இதை தாங்க முடியாமல் மத, இனதுவேச பதிவுகளை பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா தொடர்ந்து தம்முடைய ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். இதற்காக நெட்டிசன்களிடமும் செமத்தியாக வாங்கிக் கட்டி வருகிறார் ஹெச். ராஜா.
ஜல்லிக்கட்டுக்கான தமிழ் இளைஞர்களின் புரட்சியை கொச்சைப்படுத்தும் வகையில் ஹெச். ராஜா தொடர்ச்சியாக தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதற்கு உடனுக்குடன் சூடாக பதிலடியும் கொடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஆனால் அதைப்பற்றியும் கிஞ்சித்தும் ஹெச். ராஜா கவலைப்படவில்லை. தற்போது தந்தை பெரியாரை மீண்டும் வம்புக்கு இழுத்து வாங்கிக் கட்டி வருகிறார்.
ஹெச். ராஜா தம்முடைய பதிவில், தமிழை காட்டுமிராண்டி மொழி என ஈவெரா கூறினார்; தமிழர்கள் முட்டாள்கள்; கன்னடரான ஈவெரா போன்ற தலைவர்கள்தான் அவர்களுக்கு தேவை; அப்போது எங்கே போனது தமிழ் உணர்வு? என்பதுதான் அந்த பதிவு.
இதற்கு பதிலடியாக எவ்வளவு கேவலமான விமர்சனங்களை பெற முடியுமோ அத்தகைய விமர்சனங்களை ட்விட்டரில் தொடர்ந்து பரிசாக பெற்று வருகிறார் கொழுப்பாக ட்விட் போட்ட ஹெச். ராஜா.