For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடன் வாங்கலாம்... கட்டாமல் எஸ் ஆகலாம்.. விஐபி பாக்ஸில் உட்கார்ந்து மேட்ச் பார்க்கலாம்!

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி விட்டு கட்டாமல் நாட்டை விட்டு ஓடிப் போய் இங்கிலாந்தில் பதுங்கியிருக்கும் விஜய் மல்லையா ஜாலியாக இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்த்து ரசித்தது மக்களை கொதிக்க வைத்துள்ளது.

விஜய் மல்லையா இப்படி கடனைக் கொடுக்காமல் தப்பி ஓடிப் போய் ஜாலியாக இருக்கிறார். ஆனால் இந்திய விவசாயிகள் தொடர்ந்து செத்து சுண்ணாம்பாகிக் கொண்டிருக்கிறார்கள், என்ன கொடுமை இது என்று பலரும் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.

விஜய் மல்லையா படு சுதந்திரமாக, ஹாயாக, இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்த்து ரசித்தது பலரையும் வியக்க வைத்துள்ளது. இந்தியா டா என்றும் பலர் நக்கலடித்து வருகின்றனர்.

கவாஸ்கருடன்

இந்தப் படத்தில் கவாஸ்கருடன் இருக்கிறார் விஜய் மல்லையா. செல்போனில் எதையோ நோண்டிக் கொண்டிருக்கிறார். யார் நம்பர் என்றுதான் தெரியவில்லை.

டிபால்டர் மல்லையா

கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத மல்லையா போட்டியைப் பார்த்து ரசிக்கிறார் என்று பொருமியுள்ளார் இவர்.

தப்பிச்சுட்டார்னு சொன்னது யாருப்பா

விஜய் மல்லையா தப்பிச்சுட்டார்னு யார் சொன்னா என்று நக்கலடித்துள்ளார் இவர்.

இவர்தாய்யா மேன் ஆப் தி மேட்ச்

மேன் ஆப் தி மேட்ச் இவர்தான் என்று போட்டுத் தாக்கியுள்ளார் இவர்.

இவரைப் பார்க்கும்போது

பத்திரிகையாளர் உமா சுதிர் கருத்து இது. இவரைப் பார்க்கும்போது எனக்கு ஹைதராபாத் திருடன் ஞாபகம் வருது என்று வெளுத்து வாங்கியுள்ளார்.

விவசாயிகளே நீங்க செத்துக்கிட்டே இருங்க. விஜய் மல்லையா அங்கே விஐபி பாக்ஸில் கும்முனு போட்டிகளைப் பார்த்து ரசிக்கட்டும்!

English summary
Netizens are trolling the govt of India and the judiciary as defaulter Vijay Mallya was watching Ind Pak CT match at Birmingham.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X