ஐய்... ஜாலி... இனிமே சபரிமலைக்கு ஃபேமிலியோட டூர் போலாம்.. நெட்டிசன்ஸ் குஷி!
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சில..
|
டூர் போலாம்
இதுவரைக்கும் சபரிமலை பக்கமா கூட போனது கிடையாது.. இனிமே அங்கிட்டு பேமிலியோட டூர்லாம் போலாம். ஐய்ய்ய்ய் ஜாலிஹே
|
ஆரோக்கியமான நகர்வு
பொது இடத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும்
அனைவருமே எந்த பாகுபாடும் இன்றி வழிபடும் நிலையை எட்டினால் நாம் ஆரோக்கியமான சமுதாயத்தில் வாழ்கிறோம் என நம்பலாம்..
அந்த வகையில்
சபரிமலை தீர்ப்பு ஒரு ஆரோக்கியமான நகர்வு!!
|
தலை கவிழ்ந்தனர்
வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தனர்.
|
வெள்ளம் வருதுன்னு பார்ப்போம்
சபரிமலை பெண்கள் அனுமதி - உச்சநீதிமன்றம்
இப்போ , எப்படி வெள்ளம் வருதுன்னு பார்ப்போம்
|
பெண்களும் போகலாம் ஐயப்பா
"அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பசுவாமி கோயிலுக்குள்அனுமதிக்க வேண்டும் "
-உச்சநீதிமன்றம்
சாமியே....
#பெண்களும் போகலாம் ஐயப்பா.. !