வயது ஆக, ஆக நீ மேலும் அழகாகிறாய் !!! ஹேப்பி பர்த்டே சென்னை!
Recommended Video
சென்னை நகரின் 379வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை: சென்னை நகரின் 379வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை 379-வது வயது என்று கூறி பிறந்த நாள் கொண்டாடி வந்தாலும் உண்மையில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரம் என கூறப்படுகிறது. 1,639-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தான் சென்னப்பட்டினத்தை வாங்கியதற்கான ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் அதற்கான ஆவணங்கள் 1,746-ம் ஆண்டு வரை செயின் ஜார்ஜ் கோட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் சென்னப்பநாயக்கருக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை குறிக்கும் வகையிலான தங்க செப்பேடு ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியானதாகவும் கருத்து நிலவுகிறது. அந்த நாள் தான் தற்போது சென்னை பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
|
பெயர்வதிற் செம்மை
பெயரது சென்னை
பெயர்வதிற் செம்மை
புயலது கண்டும்
பயில்வது கேண்மை
சதுப்பினை யுண்டு
செரிப்பவ ருண்டு
சிதைப்பவ ரென்று
சினப்பவ ருண்டு
சிதையா துவாழ்க
சிறந்து!
|
சென்னை பிடிக்கிறது
இனிய சென்னை பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழ் இனிக்கிறது அதனால் சென்னை எனக்கு பிடிக்கிறது.
|
சென்னை தினம்
வந்தாரை
வாழ (வைத்த,வைக்கின்ற,வைக்கும்)
சென்னை க்கு இன்று 379 பிறந்த நாள்
Happy Birthday Chennai
#சென்னை_தினம்
#பழைய_மயிலாப்பூர் புகைப்படம்!
|
வாழ்வளிக்கும் சென்னை
379 வது பிறந்த நாள் காணும் சென்னை!!!
வாழ்வளிக்கும் சென்னைக்கு வணக்கம்.
|
மேலும் அழகாகிறாய்
சுனாமி,புயல், மழை என எத்தனை இயற்கை இடர்பாடுகள் வந்தாலும் அத்தனையும் முறியடித்து மேலும்,மேலும் வளர்கிறாய்..
வயது ஆக,ஆக நீ மேலும்
அழகாகிறாய் !!!
379 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் சென்னை
|
இந்நாளில் போற்றுவோம்
தலையை கொடுத்தேனும் தலைநகரை மீட்போம் என முழங்கி சென்னைக்கு மூவேந்தர் கொடியை தந்த ம.பொ.சி ஐயாவை இந்நாளில் போற்றுவோம்.
#சென்னைநாள் - உணர்கிறார் பெருமையாக
|
யுனெஸ்கோ
சென்னை! இது தமிழ்நாட்டின் தலைநகர் மட்டுமல்ல, உலக தமிழர்களின் பண்பாட்டு மையம்.இந்தியாவின் நான்காவது பெரிய நகரம். யுனெஸ்கோவின் பாரம்பரிய இசையை பாதுகாக்கும் நகரங்களின் பட்டியலில் இடம் பெற்ற நகரம். இன்று 379 வது சென்னை நாள்
|
சென்னை அவதரித்த நாள்
சென்னையில் வாழ்ந்து விட்டால் உலகின் எந்த மூலையிலும் தாக்கு பிடித்து வாழ்ந்து விடலாம், எதிர்நீச்சல் போட்டு வாழ கற்று தரும் சென்னை அவதரித்த நாள்