அதிமுகவுக்கு கூடுதல் நிர்வாகிகள் நியமனம்: இரு தரப்பினருக்கும் முக்கியத்துவம்
அதிமுகவுக்கு கூடுதலாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
சென்னை: அதிமுகவுக்கு கூடுதல் நிர்வாகிகளையும் துணை நிர்வாகிகளையும் ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் நியமனம் செய்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்:
அதிமுகவுக்கு கூடுதல் நிர்வாகிகயளாகவும், துணை நிர்வாகிகளாகவும் கீழ்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
பண்ருட்டி ராமச்சந்திரன், சி பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், கேஏ செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், டி. ஜெயக்குமார், சிவி சண்முகம், ஆர் எஸ் ராஜகண்ணப்பன், ஜேசிடி பிராபகர், வி.மைத்ரேயன், பிஎச் மனோஜ் பாண்டியன், எஸ்.பி. சண்முகநாதன், எஸ்.கோகுல இந்திரா, ஆதி ராஜாராம், சோமசுந்தரம், சேவூர் எஸ் ராமசந்திரன், முக்கூர் என் சுப்பிரமணியன், புத்திசந்திரன், முருகுமாறன் ஆகியோர் கழக அமைப்பு செயலாளர்களாகவும், வைகைசெல்வன் கழக கொள்கை பரப்பு துணை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைமைக் கழக அறிவிப்பு. #AIADMK pic.twitter.com/E2uhbPst0V
— O Panneerselvam (@OfficeOfOPS) March 16, 2018
இதில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நிர்வாகிகள் நியமனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.