தண்டையார் பேட்டையில் விரைவில் புதிய ரயில் முனையம்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் பேட்டி
தண்டையார்பேட்டையில் புதிய ரயில் முனையம் அமைக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னையில் ராயபுரத்திற்கு பதில் தண்டையார் பேட்டையில் புதிய ரயில் முனையம் அமைக்கப்படும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி தெரிவித்துள்ளார்.
தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், தாம்பரம் ரயில் முனையம் அமைக்கு பணிகள் நிறைவடைந்துள்ளது. ரயில்வே துறையின் அனுமதி கிடைத்ததும் விரைவில் செயல்படத் தொடங்கும்.
ராயப்பேட்டையில் ரயில்வே முனையம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தண்டையார் பேட்டையில் புதிய ரயில் முனையம் அமைக்கப்படும். மிக விரைவில் தண்டையார் பேட்டையில் ரயில் முனையம் அமைக்கும் பணிகள் துவக்கப்படும்" என்றார்.
ஏற்கெனவே சென்னையில் சென்டரல் மற்றும் எழும்பூரில் ரயில் முனையங்கள் செயல்பட்டு வருகின்றனர். வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் சென்னை சென்ரலில் இருந்தும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலும் தற்போது நிறுத்தப்பட்டு வருகின்றது.