For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரக்கடிச்சிட்டு வண்டி ஓட்டாதீங்க... மீறி ஓட்டினா...!

By Shankar
Google Oneindia Tamil News

Recommended Video

    குடிபோதையில் வண்டி ஓட்டினால், 15 நாள் சிறை தண்டனை-வீடியோ

    சென்னை: இனி மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 15 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என சென்னை மாநகர போலீஸ் எச்சரித்துள்ளது.

    தமிழகத்தில் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது அதிகரித்து வருகிறது. பெரிய விஐபிக்களிலிருந்து சாதாரண குடிமகன் வரை இந்த நிலை தொடர்கிறது. இதனால் தினந்தோறும் ஏராளமான சாலை விபத்துகள், உயிர்ப் பலிகள் நடக்கின்றன.

    New warning to drunk and drive cases

    இதை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு கடுமையான விதிகள், அபராதங்கள், தண்டனைகளை போலீசார் அறிவித்தாலும், நிலைமை பெரிதாக கட்டுப்படவில்லை.

    வாகன ஓட்டுனர்கள், அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்தை சமீபத்தில்தான் தமிழக அரசு கட்டாயமாக்கி உள்ளது.

    இப்போது அடுத்த நடவடிக்கையாக போதையில் வாகனம் ஓட்டுவோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து 15 நாள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The Chennai Police has warned 15 days imprisonment to vehicle drivers those drunk and drive
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X