For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமணமாகி மூன்றே மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட மணமகன் - வீடியோ

காரைக்குடி கழனிவாசல் புதூரில் பெட்டிக்கடை நடத்தி வந்த அனந்தராமன் என்பவர் திருமணமாகிய மூன்றே மாதங்களில்தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

By Suganthi
Google Oneindia Tamil News

காரைக்குடி: காரைக்குடி கழனிவாசல் புதூரில் திருமணமான மூன்றே மாதங்களில் மணமகன் தற்கொலை செய்துகொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காரைக்குடி கழனிவாசல்புதூர் பகுதியில் வசித்து வந்தவர் அனந்தராமன். அவர் வீட்டருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

 Newly married man committed suicide in karaikudi

கணவன் மனைவி இருவருக்கும் எந்த மனஸ்தாபமும் இருப்பதாக வெளியில் தெரியாத அளவுக்கு இருவரும் சந்தோஷமாகவே இருந்துள்ளனர். இந்நிலையில் மனைவி வீட்டை விட்டு வெளியே போயிருந்த நேரத்தில் அனந்தராமன் தற்கொலை செய்துகொண்டார்.

அவருடைய உடலை போலீசார் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அனந்தராமன் தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எதுவும் எழுதிவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Ananda raman, who resided in Karaikudi ka;anivasal pudur committed suicide. He married just three months ago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X