For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெய்வேலியில் மணக்கோலத்தில் வந்து ஓட்டுப் போட்ட மணமக்கள்- வாழ்த்திய அதிகாரிகள்

By Mathi
Google Oneindia Tamil News

நெய்வேலி: சட்டசபை தேர்தலில் 100% வாக்குப் பதிவுக்காக தேர்தல் ஆணையம் செய்த பிரசாரம் பலன் தராமல் இல்லை... நெய்வேலி தொகுதியில் மணக்கோலத்தில் தம்பதி சமேதராய் வந்து வாக்களித்துள்ளனர்.

தேர்தலில் 100% வாக்குப் பதிவை எட்ட வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் தொடர்ச்சியான பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. இதற்காக விழிப்புணர்வு பேரணிகள் உள்ளிட்ட பல்வேறு பிரசார யுக்திகளையும் தேர்தல் ஆணையம் கையாண்டது.

இருந்தபோதும் இன்றைய மழை இந்த 100% வாக்குப் பதிவு கனவுக்கு வேட்டு வைக்கும் வகையில் தொடர்கிறது. இதனிடையே ஆறுதல் செய்தியாக நெய்வேலி தொகுதிக்குட்பட்ட பத்திரக் கோட்டையில் இன்று காலையில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் அப்படியே மணக்கோலத்தில் வந்து வாக்களித்தனர்.

இது தேர்தல் அதிகாரிகளை மகிழ்ச்சி அடையச் செய்தது. தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய மணமக்களுக்கும் அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

English summary
Newly wedding couple cast their votes at Pattarakottai in Neyveli constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X