மக்கள் நீதி மய்யத்தின் அடுத்தக்கூட்டம் திருச்சியில்.. கமல்ஹாசன் அறிவிப்பு!
மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெறும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெறும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் மதுரை ஒத்தக்கடையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சிப் பெயரை அறிவித்தார். மேலும் தனது கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிலையில் இன்று மதுரையில் இருந்து புறப்பட்ட அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மக்கள் நீதி மய்யத்தின் அடுத்தக்கூட்டம் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெறும் என அவர் கூறினார்.
அப்போது திமுகவுடன் இணைந்து செயல்படுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன் மக்கள் பிரச்சனைக்காக மற்ற கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதாக கூறினார்.
தேர்தல் நேரத்தில் தங்களின் நிலைப்பாடு குறித்து தெரிவிப்போம் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார். மரபணு மாற்ற விதை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல் அமைச்சர் ஜெயக்குமார் பேசியது விஞ்ஞானம் பேசியது போல் உள்ளது என்றார்.