அடுத்த வருடம் எப்போது புத்தக கண்காட்சி?.. இப்போதே அறிவித்த பபாசி!
சென்னையில் அடுத்த வருடம் எப்போது புத்தக கண்காட்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: சென்னையில் அடுத்த வருடம் எப்போது புத்தக கண்காட்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 4 முதல் 20-ந் தேதி வரை கண்காட்சி நடக்க உள்ளது.
சென்னையில் எல்லா வருடமும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் பிரமாண்ட புத்தகக் கண்காட்சி நடைபெறும். தமிழகம் முழுக்க மாணவர்களும், இலக்கியவாதிகளும், புத்தக விரும்பிகளும் இந்த நிகழ்விற்கு வருவார்கள்.
இந்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை இப்புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. பல விதமான புத்தகங்கள் இதில் விற்பனை ஆனது.
பொங்கல் வரை மந்தமாக இருந்த விற்பனை பொங்கலுக்கு பின் சூடு பிடித்தது. இந்த நிலையில் அடுத்த வருடத்திற்க்கான புத்தக கண்காட்சி விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பபாசி அமைப்பு நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த விவரம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ''சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி 4 முதல் 20-ந் தேதி வரை கண்காட்சி நடைபெறும். அடுத்த ஆண்டு 16 நாட்கள் புத்த கண்காட்சி நடைபெறும்'' என்று கூறப்பட்டு இருக்கிறது.
மேலும் அடுத்த ஆண்டு கண்காட்சியில் இன்னும் அதிக அளவிலான புத்தகங்கள் இடம்பெறும் என்றும் பபாசி அமைப்பு கூறியுள்ளது.