"வா.. வா.. வந்து புடி".. பிளேடு பக்கிரியாக மாறி டபாய்த்த கஞ்சா மணி.. கப்பென்று பிடித்த போலீஸ்!
கஞ்சா மணியை நெய்வேலி போலீசார் கைது செய்துள்ளனர்
Recommended Video
நெய்வேலி: தமிழ்நாட்டு போலீசுக்கிட்டயே வேலையை காட்டினா இந்த கதிதான்! "முடிஞ்சா என்னை பிடி பார்க்கலாம்" என்று போலீசுக்கு சவால் விட்ட கஞ்சா மணி இப்போது கம்பி எண்ணி கொண்டுள்ளாராம்!
பெங்களூரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் மணிகண்டன். நெய்வேலி மந்தாரகுப்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கல்யாணம் முடித்துள்ளார்.
இவருக்கு வேலையே, பெங்களூரிலிருந்து நெய்வேலி வரும்போதெல்லாம், கஞ்சா பொட்டலங்களை எடுத்துவந்து, நண்பர்களுக்கு தருவதுதானாம்!
நான் தான் மணி.. பெங்களூர் மணி பேசுறேன்.. முடிஞ்சா பிடி.. கஞ்சா வியாபாரியின் திமிர் சவால்!
வீடியோ
இப்படி தரும்போது, சக நண்பரான சுரேஷ் என்பவருடன் இவருக்கு ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதானல் அவரை கொலை செய்ய போவதாகவும், இது சம்பந்தமாக போலீசார் முடிந்தால் தன்னை கைது செய்யுமாறும் பேசி ஒரு வீடியோவை மணிகண்டன் வெளியிட்டார். கடந்த மாதம் எடுக்கப்பட்ட வீடியோ இது என்று சொல்லப்பட்டாலும், 2 நாளாகத்தான் அந்த வீடியோ படு வைரலானது.
சவால்
அதில், "நான்தான் பெங்களூர் மணி பேசுகிறேன். 28 வயசு. நான் நெய்வேலியில கஞ்சா விக்கறேன். என்கிட்ட ஆதார் கார்டு, ஐடி ப்ரூப் இருக்குன்னு உங்களுக்கு நல்லா தெரியும். கஞ்சா விக்கறதை தடுக்கற சுரேஷை வெட்ட போறேன்னு சொல்லி இருந்தேன். முடிஞ்சா என்னை கைது பண்ணுங்க" என்று சவால்விட்டு இருந்தார். அந்த வீடியோவில் மணியிடம் கஞ்சா வாங்கி அடிப்பவர்களும் நின்று கொண்டிருந்தனர்.
போலீஸ் வலை
இந்த வீடியோ பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. துணிந்து சவால் விடுத்த மணியை போலீசார் தேடி வந்தனர். நெய்வேலி மந்தாரகுப்பம் சக்தி நகரில் மணி இருப்பதாக தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து சென்றனர்.
பிளேடால் கிழிப்பு
அப்போது போலீசை பார்த்துவிட்ட கஞ்சா மணி, ஒரு செகண்ட் எதுவும் புரியாமல் விழித்தார். பிறகு திடீரென பிளேடை வைத்து, தன்னுடைய கை, வயிறு உள்ளிட்ட பல இடங்களில் சரக்.. சரக் என கிழித்து கொண்டான். அப்போதுகூட, "வா.. வா.. வந்து புடி பார்க்கலாம்.. " என்று போலீஸை திணறடித்தார். கடைசியில் எல்லா போலீசும் ஒன்றாக சேர்ந்து கோழி அமுக்கிற மாதிரி அமுக்கி.. மணியை கைது செய்து தூக்கி சென்றார்கள். இது தேவையா மணி...!