"சைபர் கிரைம் குற்றங்களில் அலட்சியப் போக்கா?” - காவல்துறைக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!
சென்னை: தமிழகக் காவல்துறை சைபர் கிரைம் குற்றங்களில் அலட்சியப் போக்கில் இருப்பதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், சைபர் க்ரைம் தொடர்பான குற்றங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்ய மறுப்பது குறித்து பதில் அளிக்கக் கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழகக் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சைபர் க்ரைம் தொடர்பாக புகார்கள் வரும் போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல்துறையினர் மறுப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கும், காவல்துறை தலைமை இயக்குநருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய அளவில் சைபர் குற்றங்கள் 69 விழுக்காடு உயர்ந்துள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் இது குறைந்திருப்பதன் முக்கியக் காரணம், சைபர் குற்றங்கள் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாததே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.