For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி உள்ளிட்ட 22 தலைவர்களைக் கொல்ல சதி... 3 "அல்கொய்தா அடிப்படை இயக்கத்தினர்" மதுரையில் கைது

மதுரையில் அல்கொய்தா அடிப்படை இயக்கம் என்ற அமைப்பை நடத்திய 3 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரமுகர்கள் 22 பேரை கொலை செய்ய திட்டமிருந்த கும்பல் கைது செய்யப்பட்டிருப்பதாக மதுரை போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 6 நாட்டு தூதரகங்களுக்கும் இவர்கள் மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.

மேலும் இரண்டு பேரை தேடி வருவதாக போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

NIA arrests suspected Al Qaeda terrorist in Madurai

கைதானவர்களின் பெயர் கரீம், அயூப், அப்பாஸ் அலி என்பதாகும். சித்தூர், மைசூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள நீதிமன்றங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் இவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஹக்கீம், தாவுத் சுலைமான் என்பவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கைதானவர்கள் பற்றிய விரிவான தகவல்கள் இன்று மாலைக்குள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Three suspects arrested by NIA and police in connection with bomb blast Mysore court Kareem, Ayub and Abbas Ali in Madurai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X