மதுரையில் கைதான "அல்கொய்தா அடிப்படை இயக்கத்தினர்" வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடையதாக மதுரையில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மதுரை: அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடையதாக மதுரையில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நேற்று மாலை சோதனை நடத்தினர். சோதனையில் வெடிமருந்து சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் செல்போன் 8 வகையான சில முக்கிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அல்கொய்தா அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த மதுரையை சேர்ந்த முகம்மது கரீம், அப்பாஸ் அலி, அசீப் சுல்தான் முகம்மது, சுலைமான் ஆகிய 4 பேரை தேசிய புலனாய்வு அதிகாரிகல் கடந்த வாரம் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 4 பேரும் சாலை வழியாக பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட இஸ்மாயில்புரத்தை சேர்ந்த அப்பாஸ் அலி, கரீம்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த சுலைமான் மற்றும் புதூர் பகுதியைச் சேர்ந்த முகமது கரீம் ஆகியோரின் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நேற்று மாலை சோதனை நடத்தினர். சோதனையில் வெடிமருந்து சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் செல்போன் 8 வகையான சில முக்கிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.