For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைரலான அந்தரங்க புகைப்படம் பொய்யானது... எதற்காக எடுக்கப்பட்டது தெரியுமா?.. நிலானி கண்ணீர்

Google Oneindia Tamil News

Recommended Video

    நடிகை நிலானி கண்ணீர் மல்க பேட்டி

    சென்னை: தற்போது வைரலாகி வரும் அந்தரங்க புகைப்படங்கள் நாங்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய குறும்படத்துக்காக எடுக்கப்பட்டது மட்டுமே என்று நடிகை நிலானி தெரிவித்தார்.

    நடிகை நிலானி டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். பிரியமானவள் சீரியலில் வைத்தியின் மனைவியாக நடித்தவர். இவர் சினிமா உதவி இயக்குநர் லலித்குமாரை திருமணம் செய்ய மறுத்ததால் சென்னை கேகே நகரில் நடுரோட்டில் கடந்த 16-ஆம் தேதி தீவைத்து கொளுத்தி கொண்டார்.

    இந்நிலையில் நிலானியின் பேஸ்புக் மூலமாக லலித்குமாருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இரு குழந்தைகள்

    இரு குழந்தைகள்

    நிலானிக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் நிலானியை விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டார். இந்நிலையில் நிலானி இரு குழந்தைகளையும் விட்டு விட்டு தலைமறைவாகிவிட்டார் என்ற செய்திகள் வெளியானது.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    இதையடுத்து நடிகை நிலானி நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் தனக்கும் லலித்குமார் தற்கொலைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. தன் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரிக்கை விடுத்தார்.

    லலித்குமார்

    லலித்குமார்

    இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் நிலானி. அப்போது கண்ணீர் மல்க அவர் பேட்டியளித்தார். அவர் கூறுகையில் நான் எந்தவித தவறையும் செய்யவில்லை. எனக்கு யாரும் இல்லை. இதை பயன்படுத்திக் கொண்டுதான் லலித்குமார் என்னுடன் பழகினேன்.

    பல பெண்களுடன் தொடர்பு

    பல பெண்களுடன் தொடர்பு

    எனக்கும் எனது பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு 2-ஆவது திருமணத்துக்கு முதலில் மறுத்த நான் பின்னர் ஒப்புக் கொண்டேன். அப்போது அவரது செல்போனை ஆராய்ந்தபோது அவருக்கு பல பெண்களுடன் தொடர்பிருப்பதை தெரிந்து கொண்டேன்.

    என்னை மிரட்டினார்

    என்னை மிரட்டினார்

    பின்னர் அவருடன் பழகுவதை நிறுத்தினேன். எனினும் என்னை விடாமல் மிரட்டி வந்தார். நானும் அவரும் குறும்படம் எடுத்தபோது எடுக்கப்பட்டவைதான் சமூகவலைதளங்களில் பரவி வரும் புகைப்படங்கள் , வீடியோக்கள். ஆனால் அதை வைத்து கொண்டு என் மீது தவறு உள்ளது போல் சித்தரிக்கிறார்கள். என் மீது எந்த தவறும் இல்லை என்று நிலானி கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    English summary
    Nilani says that the private photos with Lalitkumar was taken for short film which we produced.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X