For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் காமாட்சி அம்மன் பேசறேன்.. பாவா வந்தாதான் வருவேன்.. நிர்மலாதேவி ஆவேசம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் வினோதமாக நடந்து கொண்டார் நிர்மலாதேவி

Google Oneindia Tamil News

Recommended Video

    Nirmala Devi medidation | நீதிமன்றத்திலிருந்து வெளியேற மறுப்பு! தியானம் செய்யும் நிர்மலா தேவி-வீடியோ

    ஸ்ரீவில்லிப்புத்தூர்: "நான்தான் காமாட்சி அம்மன் பேசறேன்.. எனக்கு விடுதலை கிடைச்சிடுச்சு.. என் பாவா வந்தால்தான் வருவேன்.." என்று கோர்ட்டில் உளறி கொட்டிய நிர்மலாதேவியால் பரபரப்பு ஏற்பட்டது.

    மாணவிகளை தவறான பாதையில் அழைத்துச்சென்ற வழக்கில் கைதாகி, ஒன்றரை வருஷம் ஜெயிலிலும் அடைக்கப்பட்டார் நிர்மலாதேவி.

    பிறகு நீண்ட நாளாக ஜாமீனுக்கு முயற்சி செய்து கொண்டிருந்தவருக்கு நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு, ஜாமீனையும் வழங்கியது. இந்த விசாரணை இன்னும் முடியாததால், ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    ஜாமீனில் வெளிவந்ததில் இருந்து நிர்மலாதேவியிடம் நிறைய மாற்றங்கள் காணப்பட்டது. நடை, உடைகளில் வித்தியாசமாக தெரிந்தார். பார்ப்பதற்கே ஒரு தெளிவாக இருந்தார். மீடியாக்களிடம் பேச கூடாது என்ற தடை உள்ளதால், கோர்ட்டுக்கு வரும்போதெல்லாம் அவரது நடவடிக்கைகளைத்தான் பார்க்க முடிகிறது.

    ஹேர்ஸ்டைல்

    ஹேர்ஸ்டைல்

    அதன்படி, சென்றமுறை சுடிதார் அணிந்து வந்திருந்த நிர்மலாதேவி இந்த முறை தலைமுடியை வெட்டி புது ஹேர்ஸ்டைலில் காணப்பட்டார். அதாவது வரும்போதே முடிகளை கைகளால் வெட்டி, அதை தன் மீதுபோட்டுக் கொண்டே வந்தார். எப்போது வந்தாலும் சத்தமில்லாமல் செல்லும் நிர்மலாதேவி இந்த முறை நிறைய பேசினார். யாரிடமும் இல்லை.. தனியாகவே பேசினார்.. உளறினார்.. பிதற்றினார்.

    காமாட்சி

    காமாட்சி

    வழக்கு விசாரணையின் போது அவர், "நான்தான் காமாட்சி அம்மன் பேசறேன். காமாட்சியின் அருள் எனக்கு கிடைச்சாச்சு. என் குழந்தைங்க எல்லாம் செத்து போச்சு. எனக்காக சாட்சி சொன்ன மாணவிகள் எல்லாருமே தூக்கு போட்டுட்டு போய்ட்டாங்க.. எனக்கு காலைல 10 மணிக்கே விடுதலை கிடைச்சிடுச்சு. எல்லோரும் பட்டாசு வெடிச்சு கொண்டாடுங்க" என்று அவர் இஷ்டத்துக்கு கண்களை மூடிக்கொண்டே சொல்லியபடி இருந்தார்.

    நீதிபதி

    நீதிபதி

    நிர்மலாதேவியா இப்படியெல்லாம் பேசுவது என்று கோர்ட்டில் இருந்தவர்கள் ஒருகணம் மிரண்டு போய்விட்டார்கள். இவ்வளவும் வழக்கு விசாரணையின்போதுதான் நடந்தது. நீதிபதி அடுத்த வாய்தா 22-ம் தேதி என்று சொன்னதையடுத்து, அவரை உடன் இருந்தவர்கள் வெளியே நகர்த்தி கொண்டு வந்தனர்.

    அனுப்பி வைத்தனர்

    அனுப்பி வைத்தனர்

    ஆனால் அங்கிருந்த பெஞ்ச் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு, கண்களையும் மூடிக்கொண்டு, "நான் பாவா வந்தால்தான் வருவேன்" என்று சொல்லி கொண்டே இருந்தார். இதையடுத்து, அங்கிருந்தோர் காருக்குள் இழுத்துச்சென்று உட்காரவைத்து அவரை அனுப்பி வைத்தனர்.

    மன உளைச்சல்?

    மன உளைச்சல்?

    உண்மையிலேயே நிர்மலாதேவிக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை. எதற்காக இப்படி பிதற்ற வேண்டும், தன்னையும் அறியாமல் பேச வேண்டும்? ஜாமீன் கிடைக்காமல் மன உளைச்சலில் ஜெயிலுக்குள்ளேயே அவதிப்பட்ட நிர்மலாதேவி, இப்போது வெளியில் வந்த பின்பு இப்படி நடந்து கொள்ள காரணம் எதுவும் தெரியவில்லை என்றாலும், இன்று நிர்மலாதேவியின் செயல்பாடுகள் படு வித்தியாசமாக காணப்பட்டன.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    ஜாமீனில் வெளிவந்ததில் இருந்து நிர்மலாதேவியிடம் நிறைய மாற்றங்கள் காணப்பட்டது. நடை, உடைகளில் வித்தியாசமாக தெரிந்தார். பார்ப்பதற்கே ஒரு தெளிவாக இருந்தார். மீடியாக்களிடம் பேச கூடாது என்ற தடை உள்ளதால், கோர்ட்டுக்கு வரும்போதெல்லாம் அவரது நடவடிக்கைகளைத்தான் பார்க்க முடிகிறது.

    English summary
    Professor Nirmala Devi is said to have behaved differently on the Srivilliputhur court premises
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X