திறமையாளர்களை ஊக்குவிக்க நீங்க ரெடியா? நிதி ஆயோக் அழைக்கிறது
சென்னை: நிதிஆயோக் ஏற்பாடு செய்துள்ள தன்னார்வலர்களுக்கான ஊக்குவிப்பாளர்கள் அழைப்பில் நீங்களும் பங்கேற்கலாம்.
நாடு முழுக்க உள்ள இளம் திறமையாளர்களை கண்டறிந்து ஊக்குவிக்கிறது மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு. இப்படியான திறமையாளர்களுக்கு மென்டர் என்ற வகையில் ஆலோசனைகள் வழங்க மூத்தவர்களையும் துணைக்கு அழைக்கிறது இந்த அமைப்பு.
நிதி ஆயோக்கின் இந்த திட்டத்திற்கு பிரபலங்கள் பலரும் ஆதரவு அளித்து வருகிறார்கள். பயோகான் நிறுவன தலைவர் கிரன் மஜூம்தாரும் டிவிட்டரில். இந்த திட்டத்தில் கைகோர்க்க அழைப்புவிடுத்துள்ளார்.
Join me in the @NITIAayog inititiave to empower young innovators across India. Become a #MentorOfChange! Apply now: https://t.co/s6v5Nxf5iK
— Kiran Mazumdar Shaw (@kiranshaw) September 14, 2017
மாற்றத்திற்கான மென்டராக மாறுங்கள், இந்த விண்ணப்பத்தை நிரப்புங்கள் எனவும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார். நீங்களும் இதில் சேரலாமே!