டப்ஸ்மாஷ்.. பிரியா பவானி சங்கருக்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள் மிரட்டல்
Recommended Video
சென்னை: நித்தியானந்தாவை கிண்டல் செய்து டப்ஸ்மாஷ் வீடியோ வெளியிட்ட நடிகை பிரியா பவானி சங்கரை அவரது ஆதரவாளர்கள் மிரட்டியுள்ளனராம்.
நடிகை பிரியா பவானி சங்கர் மேயாத மான் என்ற படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். சமீபத்தில் அவர் டப்ஸ்மாஷ் வீடியோ ஒன்றை போட்டிருந்தார். அதில் நித்தியானந்தாவின் ஆங்கில பேச்சை அவர் டப்ஸ்மாஷ் செய்திருந்தார். இது பெரும் பிரபலமாகி விட்டது. அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் போட்டுள்ளார். இது வைரலானது.
அதில் நித்தியானந்தா பேசும் பிரபல ஆங்கில வசனமான இந்த பிரபஞ்சத்துக்கே என்னை பின்பற்றுவதை தவிர வேறு வழி இல்லை என்று பேசியிருந்தார். இதையடுத்து இந்த வீடியோவை பார்த்த நித்தியானந்தா ஆதரவாளர்கள் விளம்பரத்துக்காக கேவலமான செயலை செய்துள்ளீர்கள்
சுவாமிஜி உங்களை போல அல்ல. மக்கள் அவரை விமர்சனம் செய்தாலும் அவர் நல்லது செய்வதை நிறுத்துவதே இல்லை என்று விமர்சனம் செய்ததுடன் இதுபோல் இனி செய்ய வேண்டாம் என மிரட்டலும் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இதுகுறித்து பிரியா பவானிசங்கர் கூறுகையில்,
இதற்கிடையே இதுகுறித்து பிரியா பவானிசங்கர் கூறுகையில், டப்ஸ்மாஷ் மற்றும் மியூசிக்கலி உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துவதில் எனக்கு விருப்பமும் நாட்டமும் இல்லை. எனினும் இதை வீடியோவாக என் நண்பர்கள் எடுத்ததை என்னால் தடுக்க முடியவில்லை.
இந்த அளவுக்கு இந்த வீடியோ வைரலாகும் என்று எனக்கு தெரியாது. அந்த பிரபலமான வசனங்களால் இந்த வீடியோ வைரலாகியிருக்கலாம் என நம்புகிறேன் என்றார் பிரியா பவானி சங்கர்.