For Quick Alerts
For Daily Alerts
Just In
நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடித்து ஒருவர் பலி- 6 பேர் படுகாயம்!
சென்னை: நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடித்த ஒருவர் பலியாகி உள்ளார். இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இருவர் கவலைக்கிடமாக உள்ளனர்.
நெய்வேலி அனல் மின் நிலையத்தின் 1வது சுரங்கத்தில் உள்ள கொதிகலன் குழாய் இன்று முற்பகல் திடீரென வெடித்தது. இதில் பொறியாளர் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டுவரப்படுகின்றனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து நெய்வேலி அனல்மின் நிலைய 1வது சுரங்கத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
Comments
English summary
One dead as high pressure steam piping bursts at Neyvelli Lignite Corporation in Tamilnadu. Six others suffer burn injuries.
Story first published: Tuesday, May 20, 2014, 11:53 [IST]