கோவை, நீலகிரி உட்பட 4 மாவட்டங்களில் அதீத கன மழை கிடையாது.. வானிலை மையம்
Recommended Video
சென்னை: கோவை, நீலகிரி, தேனி, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதீத கனமழை கிடையாது என்றும் இங்கு மிக கனமழைக்குத்தான் வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாலும், அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதாலும் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாளைக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே நேற்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, தேனி, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மலைப்பகுதியில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் சார்பில் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதேபோல் கேரளாவிலும் அதீத கனமழைபெய்யும் ரெட் அலார்ட் விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் காரணத்தால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதீத கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றார்.
கவலையை விடுங்க.. கொடையை எடுங்க மக்களே.. 2 நாளைக்கு செம்ம மழை.. என்ஜாய்
இதேபோல் காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்மிக கனமழை பெய்க்ககூடும் என்றும் பாலசந்திரன் கூறினார்.
மேலும் சென்னை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய அதிகாரி தனது அறிவிப்பில் கூறினார்.