For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் பெட்ரோல் தட்டுப்பாடு இல்லை- பீதி அடையாதீங்க- பங்குகள்தான் இயங்கவில்லை.. ஐ.ஓ.சி.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பெட்ரோ, டீசல் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும் பெட்ரோல் பங்குகள் பல இயங்கவில்லை என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் கடந்த 3 நாட்களாக பெட்ரோல், டீசலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. பல மணிநேரம் காத்திருந்துதான் பெட்ரோல், டீசலை வாங்க முடிகிறது.

No fuel shortage in Chennai, but many pumps are not operational: IOC

இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை; பல பெட்ரோல் பங்குகளில் தண்ணீர்தேங்கியிருப்பதால் செயல்படவில்லை.

இதனால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். மேலும் பெட்ரோல் பங்குகளில் பணியாளர்கள் வராததாலும் அவை மூடப்பட்டுள்ளன.

வெள்ளநீர் தேங்கியுள்ள பகுதிகளில் எரிபொருட்களை விநியோகிக்க முடியாத நிலையில் திருச்சி, ஆந்திராவின் சித்தூர், கர்நாடகாவின் பெங்களூரில் இருந்து அவற்றை கொண்டுவரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Indian Oil today said that all efforts are being made to effectively dispense fuels wherever it is feasible in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X