For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தினகரன் திடீர் பல்டி.. தனிக்கட்சி துவங்கவில்லை என அறிவிப்பு

தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று டி.டி.வி தினகரன் அறிவித்து உள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

நீலகிரி: தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று டி.டி.வி தினகரன் அறிவித்து உள்ளார். மேலும், இரட்டை இலை சின்னத்தையும் கட்சியையும் நீதிமன்றம் சென்று மீட்போம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் நேற்று கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறேன் என்று தெரிவித்து இருந்தார்.

 No idea to Launch new Party says TTV Dhinakaran

இதனையடுத்து எம்.ஜி.ஆர் பிறந்தநாளான இன்று டி.டி.வி தினகரன் தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நீலகிரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த பின் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது, தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்தார். மேலும், இரட்டை இலை சின்னத்தையும், கட்சியையும் நீதிமன்றம் சென்று மீட்போம் என்றும் டி.டி.வி தினகரன் தெரிவித்து உள்ளார்.

மேலும், தமிழகத்திற்கு உள்ளாட்சி தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலை உள்ளது. அதை சமாளிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

English summary
No idea to Launch new Party says TTV Dhinakaran. Also added that Soon will get Two leaves symbol and ADMK party with the Help of Justice .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X