சித்தா, யுனானி, ஆயுர்வேதா படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை.. முதல்வர் அறிவிப்பு
சித்தா, யுனானி, ஆயுர்வேதா படிப்புகளுக்கு பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சென்னை: சித்தா, யுனானி, ஆயுர்வேதா படிப்புகளுக்குபிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சித்தா, யுனானி, ஆயுர்வேதா படிப்புகளுக்கு பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சித்தா படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு அடிப்படையிலேயே நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி சித்தா, யுனானி, ஆயுர்வேதா படிப்புகளுக்கு பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவப்படிப்புகளுக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்த முடியாது என முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.