For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தோஸ்த் படா தோஸ்த்.. என்னையும் ஓபிஎஸ்சையும் யாராலும் பிரிக்க முடியாது.. சட்டசபையில் முதல்வர் கலகல

தன்னையும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தையும் யாராலும் பிரிக்க முடியாது என்று சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி பேசியுள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: தன்னையும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தையும் யாராலும் பிரிக்க முடியாது என்று சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி பேசியுள்ளார்.

இன்று சட்டசபையில் நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது. கிமு கிபி வார்த்தைகளை பாடப்புத்தகத்தில் இருந்து அகற்றியது, இசை நிகழ்ச்சி குறித்து துரைமுருகன் காமெடி செய்தது என்று நிறைய கலகலப்பான விஷயங்கள் நடந்தது.

No one can break my friendship with OPS says TN CM EPS in assembly

அதன் தொடர்ச்சியாக, திமுகவை சேர்ந்த மூத்த தலைவர் துரைமுருகன், முதல்வர் பழனிச்சாமி மற்றும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரின் நட்பு குறித்து கேள்வி எழுப்பினார். சீரியஸாக கேள்வி கேட்காமல் மிகவும் காமெடியாக அவர்களின் நட்பு எப்படி இருக்கிறது என்று கேட்டார்.

அதற்கு முதல்வரும் காமெடியாக பதில் அளித்தார். அதில், யாராலும் என்னையும் ஓபிஎஸ்சையும் பிரிக்க முடியாது என்று முதல்வர் கூறியுள்ளார்.

நாங்கள் எப்போது ஒற்றுமையாக இருப்போம். எங்களை யாராலும் பிரிக்க முடியாது. நாங்கள் ஒற்றுமையாக இருப்பது சிலருக்கு பிடிக்கவில்லை. எங்கள் ஒற்றுமை அண்ணன் துரைமுருகனுக்கு உறுத்துகிறதா என்று துரைமுருகனை பார்த்து முதல்வர் கேள்வி எழுப்பினார்.

English summary
No one can break my friendship with OPS says TN CM EPS in assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X