For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எந்த பிரச்னையாக இருந்தாலும் வீதிக்கு வந்து போராடுவோம் - ஆர்.ஜே. பாலாஜி

தமிழர்களை இனி யாரும் ஏமாற்ற முடியாது. எந்த பிரச்சினை என்றாலும் வீதிக்கு வந்து போராடுவோம் என்று ஆர்.ஜே. பாலாஜி கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர். மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை சந்திக்க வந்த ஆர்ஜே பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார்.

No one can cheat Tamils anymore, says RJ Balaji

அப்போது அவர், மாணவர்கள் அமைதியான முறையில் போராடி வருகின்றனர். யாரையும் கஷ்டப்படுத்தவில்லை. இந்த போராட்டம் ஜல்லிக்கட்டுக்காக நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு தமிழ் கலாச்சாரத்தின் அடையாளம் என்றால், அதற்காக இப்படி ஒன்று சேர்ந்து போராடுவது நம் ஒற்றுமையின் அடையாளம் என்றார்.

இனி எந்த பிரச்னையாக இருந்தாலும் வீதிக்கு வந்து போராடுவோம். விவசாயி தற்கொலை, கல்விக்கொள்ளை என்று எந்த பிரச்னை என்றாலும் மாணவர்கள் வீதிக்கு வந்து போராடுவார்கள். இனியும் தமிழன் ஏமாற மாட்டான் என்றும் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்தார்.

English summary
Actor RJ Balaji has said that no one can cheat Tamils anymore. The people will down to streets for their rights hereafter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X