கமல் ஹாஸன் அலுவலகத்துக்கு ஏழு நாட்களாக மின்சாரம் வரவில்லையாம்!
நடிகர் கமல் ஹாஸனின் எல்டாம்ஸ் சாலை அலுவலகத்துக்கு கடந்த ஏழு நாட்களாக மின்சாரம் வழங்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ள நிவாரண நிதி கொடுத்து விட்டீர்களா? என்ற கேள்விக்கு, ‘என் வரிப்பணம் என்ன ஆச்சு?' என்று ஆவேசமாகக் கேட்ட கமல், அடுத்த சில தினங்களிலேயே ‘நான் அப்படிச் சொல்லவே இல்லை. களத்தில் இறங்கி வேலை செய்யும் யார் மனதையும் நான் புண்படுத்தியிருந்தால், மன்னித்துக் கொள்ளுங்கள்!' என்று மறுப்பறிக்கை தந்தார்.
இதைப் படித்தவர்கள் இடையில் என்னமோ நடந்திருக்கு என்று முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டனர். என்ன நடந்திருக்கும் என்பது இப்போது கிட்டத்தட்ட வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
கமலின் ஆழ்வார்பேட்டை அலுவலகம் அமைந்திருக்கும் எல்டாம்ஸ் ரோடு பகுதி மட்டும் கடந்த ஒருவார காலமாக அரசாங்கத்தால் கைவிட்டப்பட்ட பகுதியாக காட்சி தருகிறது.
எல்டாம்ஸ் ரோடு சாலைகளில் கழிவு நீர் கலந்து ரோடு முழுக்கவே கழிவு நீர் குட்டை போல காட்சி அளித்தது.
கடந்த வாரம் புதன்கிழமை மதியம் அடைமழைக்கு சாலையில் விழுந்த மரத்தை ஞாயிற்றுக் கிழமை வரை அகற்றாமல் வைத்திருந்தார்களாம். பொதுமக்களின் இடைவிடாத முயற்சி காரணமாக மரத்தை அகற்றியிருக்கிறார்கள் அதிகாரிகள். இன்னமும் மரத்தின் சில பகுதிகள் சாலையிலே கிடக்கின்றன.
கமல் ஆபிஸுக்கும் அதைச் சுத்தியிருக்கிற நான்கு வீடுகளுக்கும் மட்டும் கடந்த ஏழு நாட்களாக மின்சாரம் வரவில்லையாம்.