For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்.கே.நகரில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது- 4 சுயேட்சைகள் மனுத்தாக்கல்!

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கியது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் மிகவும் எதிர்பார்க்கும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று காலை தொடங்கியது. முதல் நாளில் இதுவரை 4 சுயேட்சைகள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஓராண்டு கழித்து நடைபெறுகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர் 21-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இத்தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 4-ந் தேதியாகும்.

டி. 7 கடைசிநாள்

டி. 7 கடைசிநாள்

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர் 5-ந் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் டிசம்பர் 7-ந் தேதியாகும்.

டிச 24-ல் வாக்கு எண்ணிக்கை

டிச 24-ல் வாக்கு எண்ணிக்கை

டிசம்பர் 21-ந் தேதி பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 24-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலையொட்டி ஆர்.கே.நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீவிர வாகன சோதனை

தீவிர வாகன சோதனை

முன்னெப்போதும் இல்லாத வகையில் இரவு நேரத்தில் வீடு வீடாக பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகரில் வாகன் சோதனைகளும் தீவிரமடைந்துள்ளன.

4 சுயேட்சைகள் மனுத் தாக்கல்

4 சுயேட்சைகள் மனுத் தாக்கல்

இன்று இதுவரை 4 சுயேட்சைகள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுசாமியிடம் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுவை தாக்கல் செய்யலாம்.

English summary
The filing of nominations for the RK Nagar Assembly constituency scheduled for December 21 began on Today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X