ஆர்.கே.நகரில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது- 4 சுயேட்சைகள் மனுத்தாக்கல்!
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கியது.
சென்னை: தமிழகம் மிகவும் எதிர்பார்க்கும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று காலை தொடங்கியது. முதல் நாளில் இதுவரை 4 சுயேட்சைகள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஓராண்டு கழித்து நடைபெறுகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர் 21-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இத்தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 4-ந் தேதியாகும்.
டி. 7 கடைசிநாள்
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர் 5-ந் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் டிசம்பர் 7-ந் தேதியாகும்.
டிச 24-ல் வாக்கு எண்ணிக்கை
டிசம்பர் 21-ந் தேதி பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 24-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலையொட்டி ஆர்.கே.நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தீவிர வாகன சோதனை
முன்னெப்போதும் இல்லாத வகையில் இரவு நேரத்தில் வீடு வீடாக பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகரில் வாகன் சோதனைகளும் தீவிரமடைந்துள்ளன.
4 சுயேட்சைகள் மனுத் தாக்கல்
இன்று இதுவரை 4 சுயேட்சைகள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுசாமியிடம் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுவை தாக்கல் செய்யலாம்.